மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..!

மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) ஆதரவு வழங்கும் வகையில் பள்ளிமுனை மற்றும் பெரிய கரிசல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் இணைந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர் வருகின்றனர்.
மேலும் மன்னாரைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய போராட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்களும் மத தலைவர்களும்,அருட் சகோதரிகளும் ஒன்றிணைந்துள்ளனர்.
இன்றைய தினம் காலை முதலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டார்கள்.

Recommended For You

About the Author: admin