பத்து பரம்பரையாக இந்நாட்டுக்காக உழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார்.
கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மலையக மக்கள் 200 வருடங்களுக்கு மேலாக இந்த மண்ணில் வாழ்கின்றனர். இலங்கையில் இருந்து ஒருவர் பிரிட்டனுக்கோ அல்லது கனடாவுக்கோ சென்றால் அங்கு 3 அல்லது ஐந்து வருடங்களில் குடியுரிமை கிடைக்கின்றது. வீடு வழங்கப்படுகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கின்றது.
ஆனால், இந்நாட்டுக்காகப் பத்து பரம்பரையாக உழைத்த மக்களுக்கு ஒரு துண்டுக் காணி கூட இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் காணி உரிமை அற்றவர்களாகவே வைக்கப்பட்டு வருகின்றனர்.
மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசுகள் இந்த மக்களுக்குக் காணி உரிமையை வழங்கவில்லை. ஒரு கொட்டகையை அமைப்பதாக இருந்தால்கூட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அவர்கள் அனுமதி வழங்காத நிலையும் நீடிக்கின்றது.
வடக்கு, கிழக்கை விடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றன.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா கூட போதாது. நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ந்து

