கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவர் கனடாவில் பணிபுரிந்து கொண்டிருந்த போது நேற்று (21) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்பவரே கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள மார்க்கம் நகரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது குடியிருப்புக்கு அருகிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம், யார் துப்பாக்கிச் சூடு நடத்தியது போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக வந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்த போது அவர் உயிரிழந்துவிட்டார்..

இது ஒரு இலக்கு வைக்கப்பட்ட சம்பவம் என புலனாய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் தனது மனைவி, மூன்று சகோதரிகளுடன் இந்த இல்லத்தில் வசித்து வந்தார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களை புலனாய்வாளர்கள் தேடி வருகின்றனர். எனினும், சந்தேகநபர்கள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சம்பவம் குறித்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin