சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது!

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஜீப் கைப்பற்றப்பட்டது!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஜீப் வண்டியொன்றை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது.

குறித்த ஜீப் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுவதாக மேற்படி ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி கடந்த 18ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஜீப்பை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட வர்த்தகருக்கு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அந்த உத்தரவுகளை மீறியதன் காரணமாக பதுளை நெலும்கம பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினர், குறித்த ஜீப்பை தமது கைப்பற்றினர்.

Recommended For You

About the Author: admin