பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க மேலும் பல பிரபலங்கள் தீர்மானம்!

பொதுத்தேர்தலில் போட்டியிடாதிருக்க மேலும் பல பிரபலங்கள் தீர்மானம்!

தற்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பலர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

காமினி லொக்குகே, ஜோன் செனவிரத்ன, மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற பல கட்சிகள் அதிக எண்ணிக்கையான இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin