விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் விவசாயிகள்

விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

 

நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்கள் விவசாய வேலைகளை விட்டு செல்வதாகவும் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக திணைக்களத்தின் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.

 

இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin