6 மாத கர்ப்பத்துடன் பாடசாலை சென்ற மாணவி-பெற்றோரும் உடந்தை-விசாரணையில் வெளியான பகீர் தகவல்.

பதின்ம வயது மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் 6 மாத கர்பத்துடன் பாடசாலை சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய உதவியதாக பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கெபித்திகொல்லாவ மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேக நபர் பதவிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய பெற்றோர் அனுமதித்ததாகவும் கூறப்படுகின்றது. அதோடு சிறுமியின் கர்ப்பத்தை மறைத்ததாகவும், அவள் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தபோது பாடசாலைக்கு சென்றதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வஹல்கட பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பிரதேசவாசிகளிடம் கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

குற்றத்திற்கு உதவிய மற்றும் மறைத்த குற்றத்திற்காக பொலிஸ் உத்தியோகத்தரான சிறுமியின் தந்தை, மற்றும் அவரது தாயாரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியை பரிசோதித்த ஜே.எம்.ஓ., சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ததாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin