ஜனாதிபதி அனுரவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கும் இடையில் சந்திப்பு!

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார்
பொரளை பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பேராயரைச் சந்தித்து நலம் விசாரித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
இலங்கையின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தினால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தேவையான விடயங்களை கொண்டுவரும் முக்கியமான பணியை இலங்கை மக்கள் அவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நான் கருதுகின்றேன் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு குறிப்பிட்டிருந்தார்

Recommended For You

About the Author: admin