திருடர்களைப் பிடிக்கத் தயாரானார் ஜனாதிபதி அநுரகுமார!

கடந்த காலங்களில் நாட்டையே உலுக்கிய 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்துடன் மீள ஆரம்பிக்க புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
இதன்படி, சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட மேலும் 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது .
கடந்த அரசாங்கத்தின் கடந்த 2 வருட காலப் பகுதியில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன் முன்னைய அரசாங்கங்களின் பல மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
தற்போது அது தொடர்பான நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

Recommended For You

About the Author: admin