பலமான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்-மஹிந்த ராஜபக்

ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பலமான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் அதிகாரத்தை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: admin