மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய தேவை – மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்ற தேர்தலை விடவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,
ஜனாதிபதியின் உரைக்கமைய நாடாளுமன்றம் ஓரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 தொடக்கம் 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவிக்கும்.
வர்த்தமானியில் வேட்புமனு தாக்கலுக்கான தினத்தையும் தேர்தலுக்கான தினத்தையும் குறிப்பிட வேண்டியதில்லை.
அதாவது இவ்வாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்துக்குள்
நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்போதுள்ள நாடாளுமன்றத்திற்கும் மக்கள் ஆணை கிடையாது. எனவே இந்த நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு
பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும். அதேவேளை உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும்
நடத்தி மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது மாகாண சபைகளும் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. அவை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்.
ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக நாம் முன்னிற்போம்.
13ஆவது திருத்தமா அல்லது 13 பிளஸா என்பது இரண்டாம் பட்சமாகும். ஆனால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டாா்.

Recommended For You

About the Author: admin