பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று காலை பேலியகொட மெனிங் சந்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவியமை தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பேலியகொட மெனிங் சந்தை மற்றும் பேலியகொட மத்திய மீன் சந்தை மூடப்படும் என வதந்திகள் மூலம் பயத்தை உருவாக்க வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin