தேடப்பட்டு வந்த நபர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் கைது!

நிதி மோசடி செய்த குற்றச் சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து இலங்கை வந்த பின்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) தெரிவித்துள்ளது.

கண்டியில் வசிக்கும் 32 வயதுடைய சந்தேகநபர் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிய காலத்தில் 10.8 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin