தேர்தலில் ரணில் தோற்றாலும் ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதி!

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோற்றாலும், ஆறு மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாவார் என இராஜாங்க அமைச்சர் அனுரத ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்ய இன மத பேதங்கள் இன்றி இணைந்து செயற்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து ஆதரவளிக்கும் ஒரே தலைவராக ரணில் விக்ரமசிங்க திகழ்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
வேறும் வேட்பாளர் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வெற்றியீட்டி, ஜனாதியாக நியமிக்கப்பட்டாலும் ஆறு மாதங்களில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin