தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஜய்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளிவந்தது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கிய 6 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை கட்சியின் முதல் மாநாடு நடக்கவில்லை. வருகிற 23ஆம் தேதி முதல் மாநாடு நடக்கவிருந்த நிலையில், அதுவும் தற்போது தள்ளிப்போய்விட்டது.
இதனால் அக்டோபர் 15ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து கட்சியின் தலைவர் விஜய்யின் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்த நிலையில் இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள். இதில் பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
பெரியாருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதில் “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்.
மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin