ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தக் கொடுப்பனவில் சீருடைக்கும் 2,500 ரூபாய் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி, இந்த கொடுப்பனவு அடுத்த வருடம் முதல் வழங்கப்படும்.

பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

ஏற்கனவே, முன்னைய முயற்சியின் கீழ் அவர்களுக்கு 5,000 வழங்கப்படுவதாக கூறப்பட்டபோதும், இது இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

Recommended For You

About the Author: admin