வைத்தியர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் – தம்பன்னை குளத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் தகவல் சேகரிக்க வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்குள்ள வைத்தியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அவருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.

Recommended For You

About the Author: admin