நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16,18 மற்றும் 20 வயது பூப்பந்தாட்ட அணிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16,18 மற்றும் 20 வயது பூப்பந்தாட்ட அணிகள் வரலாற்றுச் சாதனையுடன் தேசிய மட்டத்திற்கு தெரிவு. !

கடந்த 2024.07.25,26,27ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் திருகோணமலை Mc-KHeyzer உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதில் பங்குபற்றிய நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16 மற்றும் 20 வயது பிரிவு பூப்பந்தாட்ட அணிகள் இரண்டும் சம்பியன் பட்டமும் 18 வயது பூப்பந்தாட்ட அணி மூன்றாம் இடத்தையும்வென்று வரலாற்றுச் சாதனையுடன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றி பெற்ற அஷ்ரக்கியன் பூப்பந்தாட்ட அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்துவதோடு இதற்காக அனுமதியளித்த கல்லூரி முதல்வர் ஏ.அப்துல் கபூர் மற்றும் பிரதி உதவி அதிபர்களின் ஆலோசனை வழிகாட்டலின் படி இணைப்பாட விதான செயற்பாடுகளுக்கு பொறுப்பான உதவி அதிபர்களில் ஒருவரான எம்.எம்.எம். உவைஸ் அவர்களது நெறிப்படுத்தலில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த பூப்பந்து அணியின் பொறுப்பாசிரியர் எம்.எம். தன்ஸீப் மற்றும் மாணவர்களை பயிற்சியளித்து வழிப்படுத்திய பூப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளர் பீ.எம். காலமுதீன் மற்றும் பாடசாலையின் முன்னாள் பூப்பந்தாட்ட வீரர்களான எம்.யூ.எம். உஸாமா, எம்.எம்.எம். ஹிஷாம் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு எமது பாடசாலையின் உடற்கல்வி துறைக்கு பொறுப்பான ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் மற்றும் பாடசாலையின் அதிபர், பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பாடசாலையின் அபிவிருத்திக் குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (PPA), ஆகியோர்களுக்கும் வீரர்களின் பெற்றோர்களுக்கும் அஷ்ரக்கியன் சமூகம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

Recommended For You

About the Author: admin