2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டி: இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதி

இலங்கை ஓட்டப்பந்தய வீரர் அருண தர்ஷன 2024 பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

அதன்படி, அவர் ஆடவர் 400 மீற்றர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேகம்கே ஆகியோருடன் தர்ஷன இணைகிறார்.

அருண தர்ஷன சமீபத்தில் பஹாமாஸில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீட்டர் போட்டியில் 45.90 வினாடிகளைக் கடந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

அவர் முன்னாள் மூத்த தடகள வீரர் சுகத் திலகரத்னவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வருவதாக, பல வட்டாரங்களில் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin