பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் மாபெரும் வெற்றி உரை

பிரித்தானியாவில் தற்போது மாற்றம் ஆரம்பித்துள்ளதாக தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

மத்திய லண்டனில் நடைபெற்ற வெற்றிப் பேரணியில் தொழிற்கட்சி தலைவர் தனது ஆதரவாளர்களிடம் இதனைக் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“உழைக்கும் மக்களின் சேவைக்கு பிரித்தானியாவை மீட்டெடுக்கத் தயார். நம் நாடு முழுவதும் மக்கள் விழித்துக் கொள்வார்கள். இந்த மகத்தான தேசத்தின் தோள்களிலிருந்து இறுதியாக ஒரு சுமை அகற்றப்பட்டது. நம்பிக்கையின் சூரிய ஒளி, முதலில் வெளிறியது, ஆனால் நாள் முழுவதும் வலுவடைகிறது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் எதிர்காலத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்ட ஒரு நாட்டில் மீண்டும் பிரகாசிக்கிறேன். நாங்கள் பொது சேவைக்கு தகுதியானவர்கள் என்பதை நிரூபிப்பதில் நாங்கள் கடுமையாக பிரச்சாரம் செய்தோம்.”

கட்சித் தொண்டர்களின் கடின உழைப்புக்கு நன்றி தெரிவித்த தொழிற்கட்சித் தலைவர் தனது நிர்வாகம் “தேசியப் புதுப்பித்தலுக்கு” உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.

தொழிற்கட்சி மாபெரும் வெற்றி

2024 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது.

பிரித்தானியாவில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வியடையும் எனவும் தொழிற்கட்சி மாபெரும் வெற்றி பெறும் எனவும் முன்னதாகவே கருத்துக் கணிப்புகள் வெளியாகின.

இந்நிலையில் பிரித்தானியாவில் 650 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரு கட்சி 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

அவ்வாறு பெரும்பான்மையை பெரும் கட்சி கட்சியின் தலைவர் பிரதமராக பொறுப்பேற்பார்.

தொழிற் கட்சிக்கு 410 இடங்களும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 131 இடங்களும், லிபரல் டெமாக்ராட் கட்சிக்கு 61 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.தற்போது தொழிற்கட்சி பெரும்பான்மையான 326 ஐத் தாண்டியது.

நைஜல் ஃபரேஜ் முதன்முறையாக நாடாளுமன்றிற்கு தேர்வு

பிரித்தானியாவில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவரான நைஜல் ஃபரேஜ், முதன் முறையாக அமைச்சர் ஆவார் என தெரிவிக்கப்படுகின்றது.

நைஜல் ஃபரேஜ் இதற்கு முன்னர் ஏழு முறை போட்டியிட்ட போதிலும் ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் இது ஓர் பெரிய மாற்றமாகும்.

மன்னிப்பு கோரிய ரிஷி

தொழிற்கட்சியின் இந்த வெற்றியானது 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது.

தோல்வி குறித்து ரிஷி சுனக் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களிடம் மன்னிப்புக் கோரினார்.

மேலும் அவர் ஆதரவாளர்களிடம் இவ்வாறு கவலை வெளியிட்டார்.

இழப்பிற்கு நான் பொறுப்பேற்கிறேன் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த இடைவெளி தலைகீழாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin