“வெற்றியை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்“: ரோஹித் ஷர்மா

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. இதனை கொண்டாடும் விதமாக இந்திய வீரர்கள் மும்பையில் திறந்த பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே அரங்கத்தில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்ததோடு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் இந்திய அணியின் வெற்றிக்காக ரூபாய் 125 கோடி ஊக்கத் தொகையும் வழங்கினர்.

இதுதொடர்பில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் ஷர்மா ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், “சிறப்பான ஒரு அணியை வழிநடத்தியதில் நான் அதிர்ஷ்டசாலி.

அணியிலுள்ள அனைத்து வீரர்களும் அருமையாக விளையாடினார்கள். மும்பை ரசிகர்களின் வரவேற்பு மெய்சிலிர்க்க வைத்தது. இந்த உலகக் கோப்பை ஒட்டுமொத்த தேசத்துக்கும் சொந்தம். ஐ.சி.சி கோப்பைக்காக 11 ஆண்டுகள் காத்திருந்த ரசிகர்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்” எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin