ஜனாதிபதியின் நாடாளுமன்ற உரைக்கு ஒரு கோடி செலவு

நாடாளுமன்ற கடந்த 02 ஆம் திகதி கூடிய போது சுமார் ஒரு கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக இந்த நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் உரையின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துடன் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

ஒன்றரை மணி நேரம் மாத்திரமே இந்த அமர்வு இடம்பெற்றது.

நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் ஒரு நாளுக்குச் செலவிடப்படும் தொகை, இது போன்ற குறுகிய அமர்வுக்கு செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin