மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

இதன்படி, “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பாரதிய ஜனாதா கட்சி வெற்றிபெற்றமைக்கு அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நெருங்கிய அண்டை நாடான இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை எதிர்நோக்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin