அநுராதபுரம் மாவட்டத்தில் மூடப்பட்ட நிலையில் 15 பாடசாலைகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை 15 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

போதிய எண்ணிக்கையான மாணவர்கள் இல்லாத காரணத்தினால் இந்த பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மூடப்பட்ட பாடசாலைகளில் சில பிரதேச செயலகங்கள் மற்றும் மாணவர் படை போன்ற அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இப்பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், முன்பள்ளிகளுக்கு சில வகுப்பறைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin