விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் பதற்றம்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த இரு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 08 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை இரவு (04) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

காயமடைந்த விமானப்படை வீரர்கள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் சோதனை மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் குறித்து காங்கிரஸ் அமைச்சர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin