இந்திய கடலோர காவற்படையால் 14 பாகிஸ்தானியர்கள் கைது

இந்திய கடலோர காவற்படையினரால் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் பாகிஸ்தானின் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்திய கடலோரக் காவற்படையினர் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பெறுமதி மிக்க போதைப்பொருட்களுடன் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது படகிலிருந்த 14 பேரையும் இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த போதைப்பொருட்கள் சுமார் 86 கிலோ நிறையுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தீவிர சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த படகில் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin