லக்னோக்காக விளையாட தோனிதான் காரணம்: ராகுல்

லக்னோ அணிக்காக தான் விளையாட தீர்மானித்தற்கு எம்.எஸ்.தோனிதான் காரணம் என அந்த அணியின் தலைவர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.

17ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 08 போட்டிகளில் விளையாடி 05 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ராகுல் தலைமையில் முதல் ஆண்டிலேயே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றதுடன், கடந்த வருடமும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்நிலையில், லக்னோ அணிக்காக தான் விளையாட தீர்மானம் மேற்கொண்டமைக்கு எம்.எஸ்.தோனிதான் காரணம் என கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

“அவருடைய தொப்பியில் எப்போதும் இலக்கம் 01 இருக்கும். ஏனெனில் அவர் சி.எஸ்.கே. அணியின் முதல் வீரர்.எனவே எங்களைப் போன்ற வீரர்கள் எப்போதும் முதல் வீரராக வர முடியாது என நினைப்போம்.

ஆனாலும் ஐ.பி.எல். தொடரில் லக்னோ அறிமுனமான போது தலைவராக பொறுப்பேற்பதற்கு என்னிடம் விருப்பம் கோரப்பட்டது. அந்த அணியின் தலைவரா விளையாடினால் எனக்கு 01ஆம் இலக்கம் கிடைக்கும். அதனால் நான் லக்னோ அணியின் முதல் வீரராக விளையாடுகிறேன்.” என ராகுல் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin