கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பஸ்: ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உன்ஹானி கிராமத்தில் இன்று வியாழக்கிழமை தனியார் பாடசாலை பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெற்றோரை நிலைகுலைய செய்துள்ளது.

ஜிஎல் பப்ளிக் (GL Public School) என்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான இந்த பஸ், பாதையில் பயணித்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ்ஸில் சுமார் 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாரதி பாடசாலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்திலேயே விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஏனைய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரமழான் நோன்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தப் பாடசாலை இயங்குவது குறித்து பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin