புலத்சிங்களவில் பதற்றம்: ஒருவர் உயிரிழப்பு

புலத்சிங்கள – ஹல்வத்துர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பொது மக்களினால் தீவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் 68 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டவந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றிரவு ஏற்பட்ட இந்த விபத்தில், இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மீது மோதியுள்ளது.

சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.

பொலிஸார் தலையிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin