கெஹலியவை மாட்டிவிடப் போகின்றாரா அமைச்சின் செயலாளர்

தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் மருத்துவர் சமன் ரத்நாயக்க தனிப்பட வாக்குமூலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த வௌ்ளிக்கிழமை மாலை சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க கைது செய்யப்பட்டிருந்தார்

சனிக்கிழமை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் தான் சுயமாக முன்வந்து நீதிபதி முன்னிலையில் இரகசியமாக, தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதி அவர் தமது வாக்குமூலங்களை வழங்க முடியும் என மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin