தேநீர், சோற்றுப்பார்சல் விலை அதிகரிப்பு

சோற்றுப்பார்சல், கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் என அனைத்து உணவுப்பொருட்களின் விலை, இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கின்றன.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் அறிவித்துள்ளது.

அதன்படி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயால் அதிகரிக்கப்படுகின்றன.

அத்துடன், சோற்றுப்பொதி 25 ரூபாயினாலும் சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேநீர் 5 ரூபாயினாலும் பால் தேநீர் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin