தமிழகத்தில் நாளை போலியோ முகாம்

தமிழகம் முழுவதும் நாளையதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட முக்கியமான 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும்.

முகாமில் சுமார் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

முகாமுக்கு யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச நலன்புரிச் சங்கங்கள் போன்றன உதவிகளை வழங்கியுள்ளன.

Recommended For You

About the Author: admin