பதவி பறிபோகும் நிலையில் மோடி

பதவி பறிபோகும் நிலையில் பிரதமர் நேந்திர மோடி தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் அவரின் நிலையைப் பார்க்கப் பரிதாபமாகவுள்ளதாகவும் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில் கலந்துகொள்ளும் வகையில் இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு மோடி விஜயம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய தினம் திருநெல்வேலியில் இடம்பெற்ற பிரசாரத்தில் திமுக அரசாங்கத்தை பிரதமர் மோடி வெகுவாக சாடியிருந்தார். திமுக அரசாங்கம், லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் காணாமல் போய்விடும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் மோடியின் பேச்சு நகைப்புக்குரியது என்றும், தாம் பிரதமர் என்பதை மறந்து மற்றவர்கள் மீது பழிசுமத்துவதாகவும் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: admin