ஜனாதிபதித் தேர்தலில் அனுர முன்னிலை?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைக்கு அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக்கட்டிடத்தில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சிலருடனான கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆளுங்கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத நிலையில், பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தவுடன் அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் அமோக ஆதரவு கிடைப்பது உறுதி என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin