ஷிரந்தி தொடர்பில் ஓய்வூதியக் குற்றச்சாட்டு

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பில் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதம குரு முன்வைத்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் நிராகரித்துள்ளது.

மிஹிந்தலை ரஜமகா விகாரையின் பிரதமகுருவான வணக்கத்துக்குரிய வளஹாஹெங்குனவெவே தம்மரதன தேரர், முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ பல ஓய்வூதியங்களை பெற்று வருவதாக அண்மையில் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம்,

வண. தம்மரதன தேரர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை.

இந்த கூற்றுக்களை வன்மையாக நிராகரிக்கின்றோம்.

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஓய்வூதியம் அல்லது அரசாங்க கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படவில்லை – என்றும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin