ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) இன்று (19) இலங்கை தீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று இலங்கை வரும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பயணத்தின் நோக்கம்

இந்த பயணத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

2023 ஆகஸ்டில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியின், தெஹ்ரான் விஜயத்தின் போது ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் இருதரப்பு விவாதங்களை நடத்தியிருந்தார்.

பயணத்தில் பங்கெடுக்கும் பிற தரப்பினர்

வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹியனுடன் ஜனாதிபதி அலுவலகம், வெளி விவகார அமைச்சகம், எரிசக்தி அமைச்சகம் மற்றும் ஈரானின் பிற தொடர்புடைய அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin