டெல்லியில் இடிந்து வீழ்ந்த ஜவஹர்லால் நேரு மைதான மேடை: எட்டுப் பேர் காயம்

டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள தற்காலிக மேடை சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மைதானத்தின் நுழைவு வாயில் எண் 2 அருகே சில பணிகள் நடந்து கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் நடந்தது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் டெல்லி பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக டெல்லி பொலிஸ் அதிகாரி உறுதி செய்தார்.

குறித்த இடத்தில் தேடுதல் பணி நடந்து வருகிறது.

Recommended For You

About the Author: admin