சஜித்துடன் இணையும் சு.கவின் முக்கியஸ்தர்கள்: அதிருப்தியை வெளியிட்ட மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணையவுள்ளதாக எதிர்க்கட்சியின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களே இவ்வாறு இணைய உள்ளனர்.

இந்தக் குழு திடீரென ஐக்கிய மக்கள் சக்தியில் இணையாது என்றும் கட்டம் கட்டமாக இணைய உள்ளதாகவும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அதன் பிரகாரம் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய நபர் ஒருவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய உள்ளார்.

இதேவேளை, சு.கவின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்தக் குழு சஜித் தரப்புடன் இணைகிறது.

இது தொடர்பில் அறிந்துள்ள மைத்திரிபால சிறிசேன சம்மந்தப்பட்டவர்களிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Recommended For You

About the Author: admin