மகசீன் சிறைச்சாலையில் தமிழ் கைதி மீதி தாக்குதல்

சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மகசீன் சிறைச்சாலைக்கு தேடுதல் நடவடிக்கைக்காக பொலிஸ் குழுவுடன் வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் பிரதீபன் எனும் தமிழ் அரசியல் கைதியை தாக்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சிறைச்சாலை அலுவல்கள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழு மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அடங்கிய குழு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin