இலங்கை மக்களுக்கான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம்

இலங்கை மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டொ தெரிவித்துள்ளார்.

காணி உரிமை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ரங்கிரி தம்புலு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சுமார் பன்னிரெண்டாயிரம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin