O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை (23) முதல் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பங்களை ஒன்லைன்மூலம் அனுப்பி வைக்க முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தாரதர சாதாரண தர பரீட்சைகள், இந்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin