ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் வடக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் (working committee) வட மாகாணத்தை பிரதிநித்தபடுத்தும் உறுப்பினர்களாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று நியமிக்கப்பட்டனர்.

லக்ஷயன் மற்றும் நிரோஸ்குமார் ஆகிய இருவரும் எதிர்கட்சித்தலைவரின் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஒருங்கிணைப்பு செயலாளர்களாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin