அர்ஜுன டி சில்வா பதவி விலகத் தீர்மானம்

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடருக்குப் பின்னர் பதவி விலகுவதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணி இன்று (03) நாட்டுக்கு வருகைத்தருகிறது.

இதன்படி, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், டி20 போட்டி வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin