ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் பிரான்ஸ்

பிரான்ஸில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாரியளவிலான ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடாத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது.

அத்துடன், இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுமென குறிப்பிடப்படுகிறது.

Recommended For You

About the Author: admin