2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை பெண் ஒருவர் குற்றச்சாட்டு!

2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய தனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என மட்டக்களப்பு – மைலம்பாவெளியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,

2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டபோதிலும் 2011 ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையிலிருந்து கணவர் வெளியேறிய புகைப்படம் வெளியாகிய போதிலும் இதுவரையில் தனது கணவர் வீடுவந்து சேரவில்லை.

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தனது கணவனுடன் வவுனியா சிறைச்சாலையிலிருந்து வெளிவந்ததாக கருதப்படும் நபர் இராணுவ முகாம் ஒன்றில் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட தினம் இன்றாகும்.வலிகளையும்,வேதனைகளையும் கடந்து வாழும் சமூகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையின் வடகிழக்கில் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor