இலங்கை கிரிக்கெட்டை அழிக்க சதி: அர்ஜுன ரணதுங்க

இலங்கையில் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவேன் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்ற சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

10 காமன்வெல்த் நாடுகளின் அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, டிசம்பர் 29 முதல் ஜனவரி 06 வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin