இந்தியாவில் சட்ஜிபிடி (ChatGPT) செயலியின் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் படங்களை உருவாக்கும் சேவையில் திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகப் பயனர்கள் தரப்பில் முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் இணையத்தளமான Downdetector-இல் இது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.
சட்ஜிபிடியின் எழுத்து வடிவிலான (Text) சேவை வழக்கம்போல் தடையின்றிச் செயல்பட்டாலும், படங்களை உருவாக்கும் வசதியைப் பயன்படுத்தும் போது மட்டும் பிழைச் செய்திகள் (Error messages) காட்டுவதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சேவை முடக்கம் குறித்து அதன் தாய் நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ விளக்கமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

