விஜயகாந்திற்கு வவுனியாவில் அஞ்சலி

மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு வவுனியாவிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.

அவரது உடல் சென்னையில் உள்ள தீவுத்திடலில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

பின்னர் கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சி தலைமையகத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.

இந்நிலையில் இலங்கையிலும் நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வு வவுனியா தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு, மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.

இதன்போது மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மெழுவர்த்தி ஏற்றி,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டிருந்து அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை மறைந்த தேமுதிக தலைவருக்கு யாழ்ப்பாணம்- பொன்னாலை மற்றும் மூளாய் பகுதிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin