சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து மட்டுவில் ஆர்ப்பாட்டம்

கசிப்பு மற்றும் சட்டவிரோத மது விற்பனையை முழுமையாக ஒழிக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் கல்லடி வேலூரில் உள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கல்லடி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக நிறைவடைந்தது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி வேலூரில் தொடர்ச்சியாக 30 வருடங்களிற்கு மேலாக சட்டவிரோத மது விற்பனை இடம்பெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மதுவரி அத்தியட்சகரிடம் மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin