உலக தமிழர் பேரவை மீது வவுனியாவில் முட்டை வீச்சு

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 2500ஆவது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில், தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்துள்ளனர்.

போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அவர்கள் இமாலய துரோகிகள் என தெரிவித்தனர்.

தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தினர்.

Recommended For You

About the Author: admin